என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பா.ஜனதாவில் இணைந்ததால் பழங்குடி இன பெண்களை ரோட்டில் தவழ வைத்து நூதன தண்டனை
- கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
- வாகனங்களில் சென்றவர்கள் கண்டும், காணாமல் சென்றது போலவும் இடம் பெற்று இருந்தது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் தன்பான் பகுதியை சேர்ந்த பழங்குடி இனத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதியஜனதா கட்சியில் இணைந்தனர்.
இதற்கிடையில் அந்த பெண்களை ரோட்டில் தவழ வைத்து நூதன தண்டனை கொடுப்பது போன்ற வீடியோவை மேற்கு வங்காள மாநில பாரதிய ஜனதா தலைவர் சுகந்தா மஜூம்தார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில் 3 பெண்களும் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் ரோட்டில் படுத்து தவழ்ந்து ,தவழ்ந்து செல்வதும், இதனை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் கண்டும், காணாமல் சென்றது போலவும் இடம் பெற்று இருந்தது.
இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 3 பழங்குடி இன பெண்கள் பாரதியஜனதா கட்சியில் சேர்ந்ததால் ஆத்திரம் அடைந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களை மீண்டும் தங்கள் கட்சியில் சேருமாறு இந்த தண்டனையை கொடுத்ததாக பா.ஜனதா குற்றம்சாட்டி உள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்