search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விருது பெற்ற பாடகியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
    X

    விருது பெற்ற பாடகியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

    • தேசிய படைப்பாளிகள் விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
    • தனது பேச்சை தொடர்ந்து கேட்பதால் மக்கள் சலிப்படைந்துள்ளனர் என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் முதல் முறையாக தேசிய படைப்பாளிகள் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறந்த படைப்பாளிகளுக்கான விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    இதில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான பாடகியும், யூடியூபருமான மைதிலி தாக்கூர் என்ற பெண்ணுக்கு இந்த ஆண்டுக்கான கலாசார தூதுவர் என்ற விருது வழங்கப்பட்டது.

    எப்போதும் எனது பேச்சை தொடர்ந்து கேட்பதால் மக்கள் சலிப்படைந்துள்ளனர். நீங்கள் ஒரு பாடல் பாடுகிறீர்களா? என அவரிடம் பிரதமர் மோடி கேட்டார். அவரும், சரி பாடுகிறேன் என பதிலளித்தார்.

    இதையடுத்து, அப்படியானால் எனது பேச்சு மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது என்று ஒத்துக்கொள்கிறீர்களா? என கிண்டலாக கேட்டார். மைதிலி, "இல்லை, நான் அவ்வாறு கூறவில்லை. மக்களுக்காக பாடுகிறேன் என்றேன்" என தெரிவித்தார்.

    தொடர்ந்து அவர் பாடிய பாடலை பிரதமர் மோடி ரசித்துக் கேட்டார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×