

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற விசாகா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சில மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர்.
ரெயில் தும்மலச்செருவை அடைந்தவுடன், ஒரு கும்பல் ரெயிலுக்குள் நுழைந்து கொள்ளையடிக்கத் தயாரானது. அதைக் கவனித்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் உடனடியாக உஷார்படுத்தப்பட்டனர்.
மர்ம நபர்களை கலைக்க அவர்கள் வானத்தில் மூன்று சுற்றுகள் சுட்டனர். துப்பாக்கி சத்தம் கேட்டு பயந்துபோன திருடர்கள், கொள்ளையடிக்க கொண்டு வந்த பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு இருளில் தப்பி ஓடிவிட்டனர்.
பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே இயங்கும் கும்பல்கள் சில காலமாக ரெயில்களில் கொள்ளையடித்து வருவதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கும்பல்கள் ஒரு வார காலத்தில் இரண்டு கொள்ளைச் சம்பவங்களைச் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைமறைவான மர்ம நபர்களைத் தேடும் பணிகளை ரெயில்வே போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.