என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
முதல் 2 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது
- பாராளுமன்ற தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது
- முதல் 2 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் 2 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.
ஆனால் இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று பல நாட்களாகியும் வாக்குப்பதிவு விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடாமல் இருந்தது.
தேர்தல் ஆணையத்தின் தாமதத்திற்கு காரணம் என்ன என்று எதிர்க்கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தன.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், "இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்து பல நாட்கள் ஆகியும், வாக்குப்பதிவு விவரங்களை முதன்முறையாக தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. கடந்த காலங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்து 24 மணி நேரத்திற்குள் இறுதி வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடும். ஆனால் தற்போது இந்த தாமதத்திற்கு காரணம் என்ன?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விபரங்களை வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட விபரங்களின்படி முதற்கட்ட வாக்குப்பதிவில் 66.14% மற்றும் இரண்டாம் கட்டத்தில் 66.71% வாக்குகள் பதிவாகியிருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்