பிரதமர் மோடி கட்அவுட் சேதம்: 2 பேர் கைது - பாதுகாப்புப் படையினரை தாக்கிய மணிப்பூர் இளைஞர்கள்

இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் சென்றார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள மோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் மோடி கட்அவுட் சேதம்: 2 பேர் கைது - பாதுகாப்புப் படையினரை தாக்கிய மணிப்பூர் இளைஞர்கள்
Published on

மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர்.

வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் செல்ல தயக்கம் காட்டுவது ஏன்? என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன.

இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் சென்றார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில், மணிப்பூரில் பிரதமர் மோடியின் கட்அவுட்டை சேதப்படுத்தியதாக 2 இளைஞர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சூரசந்த்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையுடன் பயங்கர மோதலில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பதற்றம் அதிகரித்ததால் இரு இளைஞர்களும் விடுவிக்கப்பட்டனர். இளைஞர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் நிலைமை சீரானதாக போலீசார் விளக்கம் அளித்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com