என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பிரியாணி 'ருசி' இல்லை எனக்கூறிய வாலிபர் அடித்துக் கொலை- ஓட்டல் ஊழியர்கள் வெறிச்செயல்
- ஓட்டல் ஊழியருக்கும், லியாகத் அலியின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டல் ஊழியர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத், பஞ்சகுட்டா அடுத்த சந்திராயன் குட்டாவை சேர்ந்தவர் லியாகத் அலி (வயது 30).
நேற்று முன்தினம் இரவு லியாகத் அலி அதே பகுதியில் உள்ள ஓட்டலுக்கு தனது நண்பர்களுடன் உணவு சாப்பிட சென்றார். லியாகத் அலி தனது நண்பர்கள் அனைவருக்கும் பிரியாணி ஆர்டர் செய்தார்.
ஓட்டல் ஊழியர் பிரியாணி சப்ளை செய்தார். பிரியாணியை சாப்பிட ஆரம்பித்த லியாகத் அலி மற்றும் அவரது நண்பர்கள் பிரியாணி ருசியாக இல்லை என ஓட்டல் ஊழியரிடன் தெரிவித்தனர்.
இதனால் ஓட்டல் ஊழியருக்கும், லியாகத் அலியின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தை கண்ட ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் ஒன்று கூடினர்.
இதையடுத்து ஓட்டலின் ஷட்டரை இழுத்து மூடினர். பின்னர் ஓட்டல் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து லியாகத் அலி மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் கதறி துடித்தனர்.
இருப்பினும் ஆத்திரம் தீர தாக்கிய ஓட்டல் ஊழியர்கள் பின்னர் அவர்களை வெளியே தூக்கி வீசினர். படுகாயம் அடைந்த லியாகத் அலியை மீட்ட அவரது நண்பர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் லியாகத் அலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் லியாகத் அலியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டல் ஊழியர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்