search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு வாலிபர் பலி
    X

    கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு வாலிபர் பலி

    • பலத்த மழை பெய்து வருவதால் ஏரியிலிருந்து தரைப்பாலம் வழியாக மழை வெள்ளம் சென்று கொண்டு இருந்தது.
    • தரைப்பாலத்தில் சிறிதளவு வெள்ளம் செல்வதாக நினைத்த அவர்கள் காரில் கடந்து விடலாம் என சென்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நந்தியால் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் ஆச்சாரி (வயது 26).

    இவரது நண்பர் ஒருவருக்கு கர்னூரில் நேற்று திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தினேஷ் ஆச்சாரி தனது நண்பர்களான சஞ்சய், சங்கர் மற்றும் விக்னேஷ் ஆகியோருடன் காரில் சென்றார். திருமணம் முடிந்து நேற்று காலை மீண்டும் ஊருக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள ஏரியிலிருந்து தரைப்பாலம் வழியாக மழை வெள்ளம் சென்று கொண்டு இருந்தது. தரைப்பாலத்தில் சிறிதளவு வெள்ளம் செல்வதாக நினைத்த அவர்கள் காரில் கடந்து விடலாம் என சென்றனர்.

    பாலத்தில் வந்தபோது கார் திடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த காரில் இருந்த 4 பேரும் கத்தி கூச்சலிட்டனர். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது கார் வெள்ளத்தில் அடித்துச் சென்றதை கண்ட அவர்கள் இது குறித்து உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வெள்ளத்தில் அடித்துச் சென்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் சஞ்சய், சங்கர், விக்னேஷ் ஆகியோரை உயிருடன் மீட்டனர். தினேஷ் ஆசாரியின் பிணம் அங்குள்ள முள்புதரில் சிக்கி இருந்ததை கண்டுபிடித்து அவரது பிணத்தை மீட்டனர்.

    Next Story
    ×