search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெரு நாய்களை பராமரித்து தத்து கொடுக்கும் இளைஞர்கள்
    X

    தெரு நாய்களை பராமரித்து தத்து கொடுக்கும் இளைஞர்கள்

    • தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து பராமரித்து வளர்த்து பொதுமக்களுக்கு தி சேய்ஸ் அமைப்பினர் தத்து கொடுக்கிறார்கள்.
    • பெசன்ட் நகரில் நேற்று நடந்த முகாமில் சுமார் 500 நாய்கள் தத்து கொடுத்துள்ளோம்.

    சென்னை மற்றும் தமிழகத்தில் கேட்பாரின்றி, தெருக்களிலும், சாலைகளிலும் செல்ல பிராணிகளான நாய்கள், பூனைகள் சுற்றித்திரிகின்றன. அவைகள் பசி பட்டினியுடன், பரிதாபத்துடன் அலைந்து திரிகின்றன.

    இதையொட்டி தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து பராமரித்து வளர்த்து பொதுமக்களுக்கு தி சேய்ஸ் அமைப்பினர் தத்து கொடுக்கிறார்கள்.

    நாய்கள் மட்டுமல்ல பூனைகளும் வளர்க்கப்படுகின்றன. இந்த செல்லப் பிராணிகளை ஏராளமான பொதுமக்கள் தத்து எடுத்து செல்கின்றனர். இது குறித்து அமைப்பின் நிறுவனர் ஜெய சூர்யா கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் எங்களின் அமைப்பு உள்ளது. சென்னையில் மிகவும் சிறப்பாக நாய்களை பராமரித்து வழங்குகிறோம்.

    தெரு நாய்களை பிடித்து வந்து அவற்றை நன்றாக பராமரித்து தத்து கொடுத்து வருகிறோம்.

    பெசன்ட் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 100 நாய்களை தத்து கொடுத்துள்ளோம். இந்த முறை 500 நாய்களை தத்து கொடுத்துள்ளோம். தத்து கொடுத்ததுடன் விடாமல் அவை சரியாக பராமரிக்கப் படுகிறதா? என்று நேரில் சென்று விசாரிப்போம்.

    சரியாக பராமரிக்கப்படாத நாய்களை திருப்பி எடுத்து வந்து விடுவோம். பெசன்ட் நகரில் நேற்று நடந்த முகாமில் சுமார் 500 நாய்கள் தத்து கொடுத்துள்ளோம்.

    துப்புரவு பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை போலீசார், பொதுமக்கள் என அனைவரும் குழந்தைகளை போல தத்து எடுத்து சென்றனர் என்றார்.

    Next Story
    ×