என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஷோரூம் குடோனில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்பு வாகனங்கள் எரிந்து நாசம்
Byமாலை மலர்9 Sep 2022 10:52 AM GMT
- பல கோடி மதிப்பிலான 300 இரு சக்கர வாகனங்களும் எரிந்து நாசமாயின.
- தீ விபத்திற்கான சரியான காரணத்தை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜார்காண்ட் மாநிலம் பாலமு மாவட்டம் மதினி நகர் பகுதியில் உள்ள ஷோரூம் குடோன் ஒன்றில் இன்று காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 80 வயது மூதாட்டி ஒருவர் இறந்துள்ளார். மேலும், பல கோடி மதிப்பிலான 300 இரு சக்கர வாகனங்களும் எரிந்து நாசமாயின.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் 5 வாகனங்களுடன் விரைந்தனர். பின்னர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்த மூதாட்டி, ஷோரூம் உரிமையாளரின் தாய் என்றும் அவர் தீ விபத்தில் மூச்சு திணறி உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விபத்து குறைந்த மின் அழுத்தம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்றும் இருப்பினும் தீ விபத்திற்கான சரியான காரணத்தை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X