search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்தியப் பிரதேசத்தில் சாலை விபத்து- பெண்கள் உள்பட 7 பேர் பலி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மத்தியப் பிரதேசத்தில் சாலை விபத்து- பெண்கள் உள்பட 7 பேர் பலி

    • தார் மற்றும் சத்னா ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு சாலை விபத்து.
    • பலத்த காயமடைந்த மூன்று பேர் மேற்சிகிச்சைக்காக ரேவாவுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    மத்தியப் பிரதேசத்தின் தார் மற்றும் சத்னா ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

    பாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தார் மாவட்டத் தலைமையகத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள டெஹ்ரி கிராமத்திற்கு அருகே நேற்று இரவு மோட்டார் சைக்கிள் கார் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதேபோல், சத்னா மாவட்டத்தில் மாவட்ட தலைமையகத்தில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள கைர்ஹானி கிராமத்திற்கு அருகே மதிய நேரத்தில் ஜீப் கால்வாயில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். அதே வாகனத்தில் பயணித்த மேலும் 7 பேர் படுகாயமடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த மூன்று பேர் மேற்சிகிச்சைக்காக ரேவாவுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    Next Story
    ×