search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கோவிலில் சசிகலா சாமி தரிசனம்
    X

    திருப்பதி கோவிலில் சசிகலா சாமி தரிசனம்

    • ரங்கநாயகர் மண்டபத்தில் சசிகலாவுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    • புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ள சசிகலா திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

    திருப்பதி:

    சசிகலா நேற்று இரவு திருப்பதி வந்தார். அங்குள்ள வராஹ சாமியை வழிபட்டார். தொடர்ந்து இன்று அதிகாலை கோவிலுக்கு சென்ற அவர் அர்ச்சனை சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

    ரங்கநாயகர் மண்டபத்தில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதன் பின் கோவிலில் இருந்து வெளியில் வந்த அவர் ஏழுமலையான் கோவில் எதிரில் தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் வழிபாடு செய்தார்.

    புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ள சசிகலா திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

    Next Story
    ×