search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராணி எலிசபெத் மறைவு- ராகுல் காந்தி இரங்கல்
    X

    ராணி எலிசபெத் மறைவு- ராகுல் காந்தி இரங்கல்

    • இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • மகாராணி எலிசபெத் மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மகாராணி எலிசபெத் மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மாண்புமிகு ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்துக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அவர் ஒரு நீண்ட மற்றும் புகழ்பெற்ற ஆட்சியைக் கொண்டிருந்தார். நாட்டிற்கு மிகுந்த அர்ப்பணிப்புடனும் கண்ணியத்துடனும் சேவை செய்தவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×