என் மலர்tooltip icon

    இந்தியா

    தேசிய பூங்கா அருகே சாலையில் நேருக்கு நேராக புலியை கண்ட நபர்
    X

    தேசிய பூங்கா அருகே சாலையில் நேருக்கு நேராக புலியை கண்ட நபர்

    • புலியும் சாலையை விரைவாக கடந்து சென்றதால் நபர் சற்று நிம்மதியுடன் மீண்டும் நடந்து சென்றார்.
    • வன அதிகாரி பர்வீன் கஸ்வான் பதிவிட்டுள்ள வீடியோவை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம்கார்பெட் புலிகள் சரணாலயம் நாட்டின் முதல் தேசிய பூங்கா ஆகும். இங்கு புலிகள் மட்டுமல்லாது மான்கள், யானைகள், கரடி போன்ற ஏராளமான உயிரினங்கள் இருக்கின்றன.

    இந்நிலையில் இந்த பூங்காவுக்கு அருகே வெறிச்சோடிய சாலையில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் புலி நேருக்கு நேராக நடந்து வருவதை பார்த்த அவர் ஓட்டம் பிடித்து தப்பித்துள்ளார். அதே நேரம் புலியும் சாலையை விரைவாக கடந்து சென்றதால் அந்த நபர் சற்று நிம்மதியுடன் மீண்டும் நடந்து சென்றார்.

    இதுதொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி வைரலாகின. வன அதிகாரி பர்வீன் கஸ்வான் பதிவிட்டுள்ள இந்த வீடியோவை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

    Next Story
    ×