குவைத் தீவிபத்து... கொச்சி வந்த விமானம்

உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களுடன் விமானப்படை விமானம் குவைத்தில் இருந்து கொச்சிக்கு புறப்பட்டது. உடல்களை பெறுவதற்காக 8 ஆம்புலன்ஸ் வாகனங்களை தமிழக அரசு தயார் நிலையில் வைத்திருந்தது.
குவைத் தீவிபத்து... கொச்சி வந்த விமானம்
Published on

குவைத் தீ விபத்தில் 45 இந்தியர்கள் பரிதாபமாக உயிர் இழந்தார்கள். அவர்களில் கேரளாவைச் சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் ஆவர். இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இதையடுத்து உயிரிழந்த 31 இந்தியர்களின் உடல்களுடன் விமானப்படை விமானம் குவைத்தில் இருந்து கொச்சிக்கு புறப்பட்டது. கொச்சி விமான நிலையத்திற்கு வந்ததும் தனித்தனி வாகனம் மூலம் உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. உடல்களை பெறுவதற்காக 8 ஆம்புலன்ஸ் வாகனங்களை தமிழக அரசு தயார் நிலையில் வைத்திருந்தது.

இந்த நிலையில், இந்தியர்களின் உடல்களை சுமந்து வந்த வான்படை விமானம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து தமிழர்கள் 7 பேரின் உடல்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னதாகவே கொச்சி விமான நிலையத்தில் காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com