search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சென்னை நோக்கி வந்த ரெயிலில் தீ விபத்து
    X

    சென்னை நோக்கி வந்த ரெயிலில் தீ விபத்து

    • சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • ஆந்திர மாநிலம் கூடூர் ரெயில் நிலையத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அகமதாபாத்தில் இருந்து சென்னை வரக்கூடிய நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு புறப்பட்டு வந்தது. ஆந்திர மாநிலம் கூடூர் ரெயில் நிலையம் அருகே இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. ரெயிலில் சமையலறை உள்ள பெட்டியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    அதிக தீப்பற்றி எரிந்ததால் அந்த பெட்டியில் இருந்து புகைமண்டலம் எழுந்தது. அதன் அருகே உள்ள மற்ற பெட்டிகளுக்கும் புகை பரவியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சில பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர். தண்டவாள கண்காணிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் தீ விபத்தை கண்டு அலாரம் எழுப்பினர். அதற்குள் ரெயில் கூடூர் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. புகை வந்ததால் மற்ற பெட்டியில் இருந்த பயணிகள் கீழே பதறியடித்தபடி இறங்கினர். ரெயில்வே ஊழியர்கள் தீயணைப்பான்கள் மற்றும் தண்ணீர் கொண்டு ரெயில் பெட்டியில் பற்றி எரிந்த தீயை அணைக்க போராடினர்.

    புகை வெளியேற 3 ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. ஏ.சி. சப்ளையும் துண்டிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஹீட்டர் ஒன்று அணைக்கப்படாமல் எரிந்ததால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

    இதனால் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் 22 நிமிடங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

    தீ விபத்து ஏற்பட்ட சமையலறை இருந்த பெட்டி (பேண்ட்ரி கார்) பிரிக்கப்பட்டது. அதற்கு பிறகு ரெயில் சென்னை புறப்பட்டது. இந்த சம்பவத்தால் கூடூர் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×