search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    செகந்திராபாத் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
    X

    செகந்திராபாத் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    • வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் ஓட்டலுக்கு விரைந்து வந்தனர்.
    • ஓட்டலில் இருந்த ஊழியர்கள் மற்றும் உணவு சாப்பிட வந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு சோதனையை நடத்தினர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த செகந்திராபாத் ரெயில் நிலைய வளாகத்தில் நட்சத்திர ஓட்டல் உள்ளது.

    வாலிபர் ஒருவர் அவசர எண் 100-க்கு போன் செய்து ஓட்டலில் வெடிகுண்டு இருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என மிரட்டல் விடுத்து விட்டு போனை துண்டித்தார்.

    வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் ஓட்டலுக்கு விரைந்து வந்தனர். ஓட்டலில் இருந்த ஊழியர்கள் மற்றும் உணவு சாப்பிட வந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு சோதனையை நடத்தினர்.

    இதனால் செகந்தராபாத் ரெயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. நள்ளிரவு வரை சோதனை நடந்தது. இறுதியில் வதந்தி என தெரிய வந்தது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×