search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    8 மாவட்டங்களில் பா.ஜனதா வெற்றியை பறிகொடுத்தது
    X

    8 மாவட்டங்களில் பா.ஜனதா வெற்றியை பறிகொடுத்தது

    • தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தொகுதிகளிலும் பா.ஜனதா தோல்வியையே தழுவி இருக்கிறது.
    • புலிகேசிநகர் (தனி), கோலார் தங்க வயல் (தனி), ஜெயநகர், ஹனூர் ஆகிய தொகுதிகளில் தமிழ் வேட்பாளர்கள் தோல்வியை தழுவியது தமிழ் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    கர்நாடகத்தில் சிக்மங்களூர், கோலார், மாண்டியா, ராம்நகர், குடகு, மைசூரு உள்பட 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட பா.ஜனதா வெற்றி பெறாதது அந்த கட்சியினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

    இதேபோல் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தொகுதிகளிலும் பா.ஜனதா தோல்வியையே தழுவி இருக்கிறது. புலிகேசிநகர் (தனி), கோலார் தங்க வயல் (தனி), ஜெயநகர், ஹனூர் ஆகிய தொகுதிகளில் தமிழ் வேட்பாளர்கள் தோல்வியை தழுவியது தமிழ் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ராமநகரா, நரசிம்ஹ ராஜா, பெல்காம் வடக்கு, சிவாஜி நகர், சாம்ராஜ் பேட், குல்பர்கா வடக்கு, மங்களூரு, சாந்திநகர், பிதூர் ஆகிய 9 தொகுதிகளில் இஸ்லாமிய வேட்பாளர்களை காங்கிரஸ் களம் இறக்கியது. அவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

    Next Story
    ×