என் மலர்
இந்தியா

மும்பை தாராவி பகுதியில் பயங்கர தீ விபத்து- 25 வீடுகள் சேதம்
- சில குடிசைகளில் மட்டுமே தீ பரவியதால், யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த புகாரும் இல்லை.
- தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில், தாராவியின் கமலா நகர் மற்றும் ஷாஹு நகர் பகுதிகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து குடிமை அதிகாரி ஒருவர் கூறுகையில், " தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு, குறைந்தது 12 தீயணைப்பு வாகனங்கள், எட்டு தண்ணீர் டேங்கர்கள், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. சில குடிசைகளில் மட்டுமே தீ பரவியதால், யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த புகாரும் இல்லை.
மேலும், மும்பை காவல்துறை, பிரஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) நிர்வாக வார்டு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது" என்றார்.






