என் மலர்
இந்தியா

அரியானாவில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்- டெல்லியிலும் உணரப்பட்டது
- புத்தாண்டின் முதல் நாளான இன்று காலை டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
- நிலநடுக்கத்தால் யாருக்கும் காயங்களோ அல்லது சேதங்களோ இல்லை என தெரியவந்துள்ளது.
அரியானா மாநிலம் ஜஜ்ஜர் பகுதியில் இன்று அதிகாலை 1.19 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்தது.
புத்தாண்டின் முதல் நாளான இன்று காலை டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் யாருக்கும் காயங்களோ அல்லது சேதங்களோ இல்லை என தெரியவந்துள்ளது.
முன்னதாக நவம்பரில், நேபாள எல்லையில் உத்தரகாண்டில் ஏற்பட்ட, 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான நடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story






