என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
செந்தில் பாலாஜி வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
- வழக்கை வேறு தேதிக்கு மாற்றவேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
- செந்தில் பாலாஜி தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதுடெல்லி:
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், தனக்கு ஜாமீன் வழங்க கோரியும் செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கு கடந்த 6-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை சார்பில் வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் வழக்கை ஒத்தி வைக்கக்கூடாது என்று செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள் மே 15-ம் தேதி விசாரணை நடைபெறும் என்றனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை வேறு தேதிக்கு மாற்றவேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
செந்தில் பாலாஜி 330 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். வழக்கை காலதாமதப் படுத்துவதற்காகவே அமலாக்கத்துறையினர் தொடர்ந்து கால அவகாசம் கோருகிறார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வழக்கை தள்ளி வைப்பதாக இருந்தால் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்