என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி
- காவிரி நீர் மேலாண்மை வாரியம் 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட உத்தரவு
- கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு
காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு ஆகஸ்டு மாதத்துக்கான நதிநீர் பங்கை கர்நாடகம் வழங்க மறுப்பதாக கூறி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஆகஸ்டு 14-ந்தேதி மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை கடந்த ஆகஸ்டு 25-ந்தேதி தேதி விசாரித்த சுப்ரீம்கோர்ட் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 1-ந்தேதி ஒத்தி வைத்திருந்தது. அதன்பிறகு வழக்கு செப்டம்பர் 1-ந்தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதால் தமிழக அரசின் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் முறையிடப்பட்டது. அப்போது, நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரம் செப்டம்பர் 6-ந்தேதி விசாரிக்கப்படும் என கூறி இருந்தனர்.
இந்த நிலையில் செப்.6-ந்தேதி சுப்ரீம்கோர்ட்டில் விசாரிக்கப்படும் வழக்குகள் பட்டியலில் இந்த விவகாரம் இடம் பெற்றிருந்தது. ஆனால், அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி பி.எஸ். நரசிம்மா விடுமுறையில் இருந்ததால், அந்த வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன் இந்த விவகாரத்தை தமிழகத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் குறிப்பிட்டு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அப்போது, நீதிபதி பி.ஆர்.கவாய் செப்.21-ந்தேதி இந்த விவகாரம் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று கூறி இருந்தார்.
அதன்படி இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
தமிழக அரசு சார்பில் வக்கீல்கள் முகுல் ரோத்தகி, வில்சன், உமாபதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது அவர்கள், ஆகஸ்டு மாதம் முதல் தண்ணீர் திறப்பதில் கர்நாடகா பிரச்சினை செய்து வருகிறது. காவிரி ஆணையத்தின் உத்தரவை கர்நாடகம் செயல்படுத்துவதில்லை.
தற்போதைய சூழலில் கர்நாடகா அணைகளில் இருக்கும் நீரின் அளவைப் பொறுத்து பார்த்தாலும், தமிழகத்துக்கு 6400 கன அடி தண்ணீரை திறந்து விட வாய்ப்பு உள்ளது என காவிரி மேலாண்மை ஆணையம் முதலில் கூறினார்கள். இருப்பினும் 5 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்து விட்டால் போதும் என கர்நாடகாவுக்கு உத்தரவிட்டனர்.
ஆனால் கர்நாடகம் அந்த உத்தரவையும் கூட பின் பற்றுவதில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு உத்தரவை ஆணையம் பிறப்பிக்கும் ம்போதும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி தமிழ கத்துக்கான நீரை கொடுக்க கர்நாடகம் மறுத்து வருகிறது. மேலும், காவிரி ஒழுங்காற்று குழுதான் தண்ணீரின் அளவு உள்ளிட்ட புள்ளி விவரங்களை கவனத்தில் கொண்டு தண்ணீர் திறப்பதற்கான அளவை நிர்ணயம் செய்கிறது.
அவர்கள் தமிழ்நாட்டுக்கு தேவையான தண்ணீரை திறந்துவிட போதுமான பரிந்துரைகளை பல்வேறு கட்டங்களாக கொடுத்த போதும் காவிரி மேலாண்மை ஆணையம் அந்த அளவில் இருந்து எப்போதும் குறைத்து தண்ணீரை திறக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் 15 ஆயிரம் கன அடி, 10 ஆயிரம் கன அடி, 7200 கன அடி, 5 ஆயிரம் கன அடி, என தொடர்ச்சியாக தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு கொண்டே வந்துள்ளது.
எங்களுக்கு தர வேண்டிய தண்ணீர் அளவு அதிக அளவில் நிலுவையில் உள்ளது. ஆனால் அதை எல்லாம் நாங்கள் கேட்கவில்லை. தற்போதைக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை மட்டுமாவது திறந்து விட வேண்டும் என்றுதான் கேட்கிறோம். மழை பற்றாக்குறைவு இருக்கிறது என்பதை நாங்களும் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் அதற்காக அவர்களிடம் இருக்கும் நீரை கூட பகிர்ந்து கொடுக்கமாட்டேன் என்றால் எப்படி?
நாங்கள் கடைமடை மாநிலமாக இருக்கிறோம். அவர்களுக்கு அவ்வளவு பிரச்சினை என்றால் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்? வறட்சியின் பாதிப்பு என்பது அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான். கடந்த 12-ந்தேதி கூட்டத்தின் போது, 56 சதவீதம் நீர் பற்றாக்குறை என கூறினார்கள்.
ஆனால் 6400 கன அடி திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு குறிப்பிட்டுள்ளது. ஆனால் 5000 கன அடி என இறுதி உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. புள்ளி விவரத்தை கணக்கிட்டு அதனடிப்படையில் நீர் வழங்க உத்தரவிடப்பட்டும் அதனை கர்நாடகம் செயல்படுத்த மறுக்கிறது என்று வாதிட்டனர்.
அப்போது கர்நாடகா அரசு வக்கீல் கர்நாடகாவில் மழை இல்லை, காவிரியில் நீரும் குறைவாக இருக்கிறது. தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் விவசாயத்துக்கு மட்டும்தான். ஆனால் கர்நாடகாவை பொறுத்த வரை குடிநீர், விவசாயம் என அனைத்துக்கு நீர் தேவை. அதுதான் எங்களது பிரச்சினை. எங்களால் வினாடிக்கு 2500 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி சூழலை ஆராய்ந்து வருகிறது. மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேவேளையில் காவிரியில் 24 ஆயிரம் கன அடி நீரை திறக்க கோரும் தமிழ் நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது. வறட்சி கால அட்டவணைப்படி தமிழ்நாட்டுக்கான உரிய நீரை கர்நாடகா திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்