search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நூபுர் சர்மா வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்து எல்லை மீறியது-  ஓய்வு பெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை
    X

    (கோப்பு படம்)

    நூபுர் சர்மா வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்து எல்லை மீறியது- ஓய்வு பெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை

    • நூபுர் ஷர்மா கருத்து, நாட்டையே தீக்கிரையாக்கி விட்டதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
    • உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து துரதிருஷ்டவசமானது என ஓய்வு பெற்ற நீதிபதிகள் அறிக்கை.

    இறைதூதர் முகமது நபிகள் பற்றி நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் பர்திவாலா ஆகியோர் நூபுர் ஷர்மா கருத்து, நாட்டையே தீக்கிரையாக்கி விட்டதாகவும், இதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

    அவர் பொறுப்பற்ற முறையில் பேசியதால் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். பொதுவாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையின்போது மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கண்டனம் தெரிவிப்பது இல்லை. ஆனால் நூபுர் சர்மா வழக்கு விவகாரத்தில் கடுமையான வார்த்தைகளை நீதிபதி பயன்படுத்தி இருந்தனர்.

    இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து துரதிருஷ்டவசமானது என்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரிகள் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    அதில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களுக்கும், வழக்கிற்கும் துளியும் தொடர்பில்லை என்றும், இதுபோன்ற கருத்துகள், நீதித்துறை கண்ணியத்திற்கும் எதிரானது என்றும், நீதித்துறையின் எல்லையை மீறிய செயல் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

    Next Story
    ×