search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எனது குடும்பத்திற்கு வெற்றி-தோல்வி புதிது அல்ல: குமாரசாமி கருத்து
    X

    எனது குடும்பத்திற்கு வெற்றி-தோல்வி புதிது அல்ல: குமாரசாமி கருத்து

    • மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.
    • எங்கள் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபையில் ஏற்பட்ட தோல்வி குறித்து குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன். ஜனநாயகத்தில் மக்களின் முடிவே இறுதியானது. வெற்றி-தோல்வியை நான் சமமாக எடுத்து கொள்கிறேன். ஆனால் இந்த தோல்வி இறுதி அல்ல. எனது போராட்டம் இத்துடன் நின்றுவிடாது. நான் எப்போதும் மக்களுடன் இருப்பேன்.

    எங்கள் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எனக்கும், எனது குடும்பத்திற்கும் வெற்றி-தோல்வி புதிது அல்ல. இதற்கு முன்பு தேவகவுடா, எனது சகோதரர் ரேவண்ணா, நான் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளோம். வரும் நாட்களில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை பலப்படுத்தும் பணியை மேற்கொள்வோம்.

    கர்நாடகத்தில் அமைய உள்ள புதிய அரசுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும். இந்த தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு பணியாற்றிய தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×