search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சைக்கிளில் சென்ற மாணவிகள் மீது வேகமாக மோதிய கார்- பதற வைக்கும் சிசிடிவி காட்சி
    X

    சைக்கிளில் சென்ற மாணவிகள் மீது வேகமாக மோதிய கார்- பதற வைக்கும் சிசிடிவி காட்சி

    • சாலையில் நடந்து சென்ற ஆண் நபர் ஒருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் பெட்டையா பகுதியில் உள்ள சாலை ஒன்றில் மாணவிகள் கைக்கிள் ஓட்டிக் கொண்டு சென்றுக் கொண்டிருந்தனர்.

    அப்போது வேகமாக வந்த கார் ஒன்று மாணவிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த சிறுமிகள் அனைவரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களை தவிர சாலையில் நடந்து சென்ற ஆண் நபர் ஒருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 10ம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் பயிற்சி வகுப்புகளுக்காகச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

    மாணவிகள் மீது வேகமாக கார் மோதிய சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி காண்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    Next Story
    ×