search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மந்திரி சபை விரிவாக்கத்துக்கான அறிகுறி இல்லை: சரத்பவார் குற்றச்சாட்டு
    X

    மந்திரி சபை விரிவாக்கத்துக்கான அறிகுறி இல்லை: சரத்பவார் குற்றச்சாட்டு

    • மகாராஷ்டிரா மழை வெள்ளத்தை சந்தித்து வருகிறது.
    • புதிய அரசு அமைந்து ஒரு மாதமாகி விட்டது.

    மும்பை :

    மக்கள் வெள்ளத்தில் தவிக்கும் நிலையில் மந்திரி சபை விரிவாக்கத்துக்கான அறிகுறி எதுவும் இல்லை என்று சரத்பவார் குற்றம் சாட்டினார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாசிக்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    மகாராஷ்டிரா மழை வெள்ளத்தை சந்தித்து வருகிறது. மக்கள் பரிதவிக்கிறார்கள். குறிப்பாக விவசாயிகள் பெருந்துயரத்தை சந்தித்து வருகிறார்கள். இதுபோன்ற சூழலில் மந்திரிகள் நேரில் சென்று மக்கள் துயர் துடைக்க வேண்டும்.

    ஆனால் மகாராஷ்டிராவில் மந்திரி சபை விரிவாக்கத்துக்கான அறிகுறி எதுவும் இல்லை. புதிய அரசு அமைந்து ஒரு மாதமாகி விட்டது. முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி ஆகிய இருவர் மட்டுமே அரசை நடத்தி செல்லலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகிறார்கள். இவர்களிடம் இருந்து முதல்-மந்திரி ஷிண்டே பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிய அரசு கவிழுமா? என்று நிருபர் ஒருவர் சரத்பவாரிடம் கேட்டார்.

    அதற்கு அவர் பதிலளித்து கூறுகையில், "இதை கணிக்க நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல. தேர்தல் எப்போது வந்தாலும், அதை சந்திக்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×