என் மலர்tooltip icon

    இந்தியா

    வங்கதேச இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்- பிரதமரிடம் பேசிய முகமது யூனுஸ்
    X

    வங்கதேச இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்- பிரதமரிடம் பேசிய முகமது யூனுஸ்

    • தாக்குதல் நடைபெற்ற நிலையில், மோடியுடன் முகமது யூனுஸ் தொலைபேசியில் உரை.
    • வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு தேவை என முகமது யூனுஸ் வலியுறுத்தல்.

    வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்.

    இதைதொடர்ந்து, வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவி ஏற்றார்.

    வங்கதேசத்தில் இந்துகள் மற்றும் கோயில்கள் மீது தாக்குதல் நடைபெற்ற நிலையில், மோடியுடன் முகமது யூனுஸ் தொலைபேசியில் பேசியுள்ளார்.

    அப்போது, வங்கதேசத்தில் உள்ள இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பிரதமர் மோடியிடம் முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

    அப்போது, வங்கதேசத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து கருத்துப் பரிமாற்றம் இருந்தது. ஜனநாயக, நிலையான, அமைதியான மற்றும் முற்போக்கான வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு தேவை என முகமது யூனுஸ் மீண்டும் வலியுறுத்தினார்.

    வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பு காக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

    வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை அவர் உறுதியளித்தார்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×