திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி நாட்களில் சிபாரிசு கடித தரிசனம் ரத்து

பக்தர்கள் சிரமமின்றி ஏழுமலையான தரிசனம் செய்வதற்காக ஏற்கனவே ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடபட்டுள்ளது.10 இடங்களில் இலவச தரிசன டிக்கெட் நேரடியாக வழங்கப்பட உள்ளது.
திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி நாட்களில் சிபாரிசு கடித தரிசனம் ரத்து
Published on

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் வருகிற 23-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

வைகுண்ட ஏகாதசி நாட்களில் பக்தர்கள் சிரமமின்றி ஏழுமலையான தரிசனம் செய்வதற்காக ஏற்கனவே ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடபட்டுள்ளது.

10 இடங்களில் இலவச தரிசன டிக்கெட் நேரடியாக வழங்கப்பட உள்ளது. வைகுண்ட ஏகாதசி தினங்களில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பரிந்துரை கடிதங்கள் ஏற்க்கப்பட மாட்டாது என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் நேற்று 61,499 பேர் தரிசனம் செய்தனர். 24,789 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

இலவச நேரடி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com