search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அடுத்த 5 ஆண்டுகளில் 3,000 புதிய ரெயில்கள் அறிமுகம்: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
    X

    அடுத்த 5 ஆண்டுகளில் 3,000 புதிய ரெயில்கள் அறிமுகம்: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

    • இந்திய ரெயில்வே ஆண்டுக்கு 800 கோடி பயணிகளை சுமந்து செல்கிறது.
    • தற்போதைய ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுடெல்லி:

    மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் டெல்லி ரெயில் பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அடுத்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் புதிய ரெயில்கள் அறிமுகம் செய்யப்படும் என அவர் கூறினார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'தற்போது இந்திய ரெயில்வே ஆண்டுக்கு 800 கோடி பயணிகளை சுமந்து செல்கிறது. இது அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் 100 கோடியாக அதிகரிக்கப்படும். இதற்காக, நமக்கு 3,000 கூடுதல் ரெயில்கள் தேவை. இது அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பல பயணங்களை மேற்கொள்ளும்' என தெரிவித்தார்.

    இதைப்போல ரெயில்களின் பயண நேரத்தை குறைப்பதும் மற்றொரு இலக்கு எனக்கூறிய அஸ்வினி வைஷ்ணவ், அனைத்து ரெயில் தடங்களிலும் வந்தே பாரத் ரெயில்களை அறிமுகம் செய்வதற்கு நேரம் எடுக்கும் என்பதால் தற்போதைய ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    Next Story
    ×