என் மலர்
இந்தியா

காலிஸ்தான் ஆதரவு செய்திகளை வெளியிட்ட 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியது
- பஞ்சாப்பில் காலிஸ்தான் கோஷங்கள் மீண்டும் உயிர்பெறத் தொடங்கி உள்ளன.
- காலிஸ்தான் ஆதரவு செய்திகளை ஒளிபரப்பிய 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியது.
புதுடெல்லி:
பஞ்சாப்பில் காலிஸ்தான் கோஷங்கள் மீண்டும் உயிர்பெறத் தொடங்கி உள்ளன. காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் சிங் சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் அஜ்னாலா போலீஸ் நிலையத்தில் புகுந்து ரகளையில் இறங்கியது அங்கு பெரும் அதிர்வலைகளை ஏறபடுத்தியது.
இந்நிலையில், பஞ்சாப்பில் காலிஸ்தான் ஆதரவு செய்திகளை ஒளிபரப்பி வந்த 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு தற்போது முடக்கி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இயங்கி வந்த இந்த சேனல்கள் கடந்த 10 நாட்களாக முடக்கப்பட்டு இருப்பதாக மத்திய தகவல் ஒளிபரப்பு செயலாளர் அபூர்வா சந்திரா தெரிவித்தார்.
இதுதொடர்பாக மத்திய அரசு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த சேனல்களை யூடியூப் நிறுவனம் முடக்கியுள்ளது.
Next Story






