4 நாட்கள் அரசு முறை பயணமாக தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

டெல்லியில் இருந்து கோவை சூலூர் விமானப்படை தளம் வரும் ஜனாதிபதி உதகை செல்கிறார்.ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல் துறையினர் ஆலோசனை.
4 நாட்கள் அரசு முறை பயணமாக தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
Published on

ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் 27ம் தேதி அன்று தமிழ்நாடு வருகிறார்.

அதன்படி, டெல்லியில் இருந்து கோவை சூலூர் விமானப்படை தளம் வரும் ஜனாதிபதி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை செல்கிறார்.

நவம்பர் 28ம் தேதி மற்றும் 29ம் தேதிகளில் உதகையிலும், நவம்பர் 30ம் தேதி திருவாரூரிலும் சில நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல் துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com