என் மலர்
இந்தியா

என்னவா இருக்கும்!... இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
- ஜிஎஸ்டி குறைப்பால் பெரும்பாலான பொருட்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
- ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்துள்ளது. இதை ஜிஎஸ்டி 2.0 எனக் கூறுகிறார்கள். முன்னதாக 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது. இனிமேல் 5 மற்றும 18 ஆகிய இரண்டு அடுக்குகள் மட்டுமே இருக்கும். ஆடம்பர கார்கள், பைக்குகள், சிகரெட் போன்றவற்றிற்கு 40 சதவீத வரியை அறிமுகம் செய்துள்ளது.
இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இந்த சீர்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜிஎஸ்டி 2.0 மற்றும் H1-B விசா கட்டண உயர்வு குறித்து பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.
Next Story






