என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணை, டிரோன் தாக்குதல்: சைரன் ஒலிப்பு- இருளில் மூழ்கிய நகரங்கள்..!
    X

    ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணை, டிரோன் தாக்குதல்: சைரன் ஒலிப்பு- இருளில் மூழ்கிய நகரங்கள்..!

    • ஜம்முவில் உள்ள அக்னூர் உள்ளிட்ட பகுதியில் சைரன் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
    • இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் டிரோன்களை இடைமறித்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து LoC அருகே பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது. இன்று அதிகாலை டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்திய ராணுவம் இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

    அத்துடன் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் லாகூர் பாதுகாப்பு சிஸ்டம் அழிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. அக்னூர், கிஸ்த்வார், சம்பா மற்றும் பல பகுதிகளில் சைரன் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

    Blackout என அழைக்கப்படும், மின்சாரம் தடை செய்யப்பட்டு பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரும் இருளில் மூழ்கியுள்ளது.

    மேலும், LoC பகுதிகளில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது.

    Next Story
    ×