என் மலர்
இந்தியா

கவுகாத்தி-கொல்கத்தா வந்தே பாரத் ரெயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
- பிரதமர் மோடி இரு நாள் பயணமாக இன்று அசாம் மாநிலம் செல்கிறார்.
- கவுகாத்தி-கொல்கத்தா இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி வைக்கிறார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று அசாம் மாநிலத்துக்குச் செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
கவுகாத்தியில் இன்று மாலை போடோ சமூகத்தைச் சேர்ந்த சுமார் 10,000 கலைஞர்கள் இணைந்து பகுரும்பா நடனமாடும் கலாசார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இதையடுத்து, நாளை காலை ரூ.6,950 கோடி மதிப்பிலான 86 கி.மீ. நீள கஜிரங்கா மேம்பாலத் திட்டத்திற்கு பூமி பூஜை நடத்தப்பட உள்ளது.
தொடர்ந்து, வட இந்திய மாநிலங்களில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு இயக்கப்படும் 2 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
Next Story






