என் மலர்
இந்தியா

ஒடிசா ரெயில் விபத்து லைவ் அப்டேட்ஸ்
- இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது-
- சேதமடைந்த தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.
ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து பயங்கர ஏற்பட்டது. மெயின் லைனில் வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டிருந்த லூப் லைனில் வந்ததே ஒட்டுமொத்த விபத்துக்கும் காரணமாக அமைந்துவிட்டது. இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது-
விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களின் குறுக்கே கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. சேதமடைந்த தண்டவாளங்களும் சரி செய்யப்பட்டுள்ளன.
Live Updates
- 3 Jun 2023 12:45 PM IST
உதயநிதி தலைமையிலான தமிழக குழு ஒடிசா சென்றடைந்தது. விபத்து நடந்த இடத்திற்கு செல்கிறார்கள்
- 3 Jun 2023 11:53 AM IST
ஒடிசா முதல்வர் பட்நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பயணிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
- 3 Jun 2023 11:23 AM IST
தற்போது மீட்புப்பணி நிறைவந்து சீரமைப்பு வேலை நடைபெற்று வருவதாக ரெயில்வே அறிவித்துள்ளது.
- 3 Jun 2023 11:19 AM IST
238 பேர் உயிரிழந்ததாகவும், 600 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்றும் ரெயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் ஷர்மா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
- 3 Jun 2023 11:12 AM IST
பிரதமர் மோடி ஒடிசா விரைகிறார். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிறகு, கட்டாக் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூற இருக்கிறார்.
- 3 Jun 2023 11:07 AM IST
ரெயில் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு சென்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
- 3 Jun 2023 10:53 AM IST
ஒடிசா ரெயில் விபத்து குறித்து கேள்விப்பட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன் என இங்கிலாந்தில் இருந்து விராட் கோலி ட்வீட் செய்துள்ளார்.
- 3 Jun 2023 10:49 AM IST
ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தைவான் அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Next Story







