என் மலர்
இந்தியா

ஒடிசா ரெயில் விபத்து லைவ் அப்டேட்ஸ்
- இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது-
- சேதமடைந்த தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.
ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து பயங்கர ஏற்பட்டது. மெயின் லைனில் வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டிருந்த லூப் லைனில் வந்ததே ஒட்டுமொத்த விபத்துக்கும் காரணமாக அமைந்துவிட்டது. இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது-
விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களின் குறுக்கே கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. சேதமடைந்த தண்டவாளங்களும் சரி செய்யப்பட்டுள்ளன.
Live Updates
- 3 Jun 2023 7:05 PM IST
ஒடிசா சென்றுள்ள தமிழக குழு அங்கேயே தங்கியிருக்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு. தொலைந்து போனவர்களை அங்கேயே தங்கியிருந்து கண்டுபிடிக்க வலியுறுத்தல்
- 3 Jun 2023 5:35 PM IST
ரெயில் விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவ மனைக்கு நேரில் சென்று பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
- 3 Jun 2023 2:32 PM IST
ஒடிசா ரெயில் விபத்து அதிக வலியை ஏற்படுத்துவதாகவும், வேதனை அளிப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
- 3 Jun 2023 2:20 PM IST
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- 3 Jun 2023 2:13 PM IST
இதுவரை 70 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை எனத் தகவல் கிடைத்துள்ளது
- 3 Jun 2023 1:43 PM IST
விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட மம்தா பானர்ஜி ‘‘ரெயில்வே துறை உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவாக அறிவித்துள்ளது. நாங்கள் மேற்கு வங்காள மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க இருக்கிறோம். வேலை முடியும் வரை மேற்கு வங்காள மக்கள் ரெயில்வே மற்றும் ஒடிசா அரசுடன் இணைந்து வேலை செய்வார்கள்’’ எனத் தெரிவித்தார்.
- 3 Jun 2023 1:25 PM IST
பலி எண்ணிக்கை 261 ஆக அதிரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







