search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூரில் யாரும் மோடி, அமித்ஷாவை குறை கூறவில்லை: அசாம் முதல்வர்
    X

    மணிப்பூரில் யாரும் மோடி, அமித்ஷாவை குறை கூறவில்லை: அசாம் முதல்வர்

    • அரசியல் கட்சி தலைவர்கள்தான் மோடியை விமர்சனம் செய்கிறார்கள்
    • வடகிழக்கு மாநிலங்களில் 2014-க்குப் பிறகு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது

    மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் இரண்டு பெண்கள் தொடர்பான வீடியோ வைரல் ஆனதால், மணிப்பூர் விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வரும் வகையில் முக்கியத்துவம் பெற்றது.

    இந்த நிலையில் அரசியல்வாதிகள் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது குற்றம்சாட்டி வருகிறார்கள். ஆனால், மணிப்பூரில் உள்ளவர்கள் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மீது குறை கூறவில்லை என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    மத்திய அரசால் இப்படி நடக்கிறது என்று யாரும் கூறவில்லை. முன்பெல்லாம் என்ன நடந்தாலும் பழி டெல்லிக்கு வந்திருக்கும். இப்போது இது எங்கள் மோதல். இதற்கும் டெல்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது மக்களுக்குத் தெரியும்.

    இந்த மோதல் மே மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பல பகுதியில் இருந்து பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் மோடியை விமர்சனம் செய்கிறாரக்ள். ஆனால், மணிப்பூரில் இருந்து யாரும் பிரதமர் மோடியை குறைகூறவில்லை.

    2014-ல் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மெதுவான வளர்ச்சி இருந்தது. இணைப்பு அடிப்படையில் தற்போது திடீரென பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.'' என்றார்.

    காங்கிரஸ் கட்சியில் 20 வருடங்களுக்கு மேல் இருந்த ஹிமாந்த பிஸ்வா 2015-ல் பா.ஜனதாவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×