search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

    • விவசாயத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் செய்த பணி, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது.
    • வேளாண் துறைக்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தையான எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

    விவசாயத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் செய்த பணி, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது. நம் தேசத்திற்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்தது. லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

    வேளாண் துறைக்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தது. எம்.எஸ்.சுவாமிநாதன் மிக நெருக்கடியான கால கட்டங்களில் விவசாயத்துறைக்கு பெரும் பங்காற்றியவர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

    Next Story
    ×