

மத்திய பிரதேசம் மாநிலம் பன்னா மாவட்டம் கிருஷ்ணா கல்யாண புராவை சேர்ந்தவர் ராஜு. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் கல்குவாரி ஒன்றை ஏலத்திற்கு எடுத்தார். இதில் விலை உயர்ந்த வைரக்கல் ஒன்று கிடைத்தது.
இதனை கண்ட ராஜு அதை உடனடியாக அரசு அதிகாரியிடம் கொடுத்தார். அந்த வைரக்கல் 19.22 காரட் எடை இருந்தது. அதன் மதிப்பு ரூ.80 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வைரக்கல்லை ஏலத்தில் விட முடிவு செய்தனர். அதில் வரும் பணம் முழுவதையும் ராஜுவிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
எனது மனைவி குழந்தைகளுடன் ஏழ்மை நிலையில் உள்ளேன். தற்போது கிடைத்துள்ள வைரக்கல் மூலம் எனக்கு அதிக அளவில் பணம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்கள். இதன் மூலம் எனது குழந்தைகளை நன்றாக படிக்க வைப்பேன் என்றார்.