search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி நடைபாதையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது- இதுவரை ஐந்து...!
    X

    திருப்பதி நடைபாதையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது- இதுவரை ஐந்து...!

    • அலிபிரி நடைபாதையில் சென்ற சிறுமியை சிறுத்தை கடித்துக் கொன்றது
    • சிறுத்தைகளை பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது

    திருப்பதி நடைபாதையில் கடந்த மாதம் தனது பெற்றோருடன் நடந்து சென்ற லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்து சென்று கடித்து கொன்றது. இந்த சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடைபாதை அருகே கூண்டுகள் வைத்தனர்.

    அடுத்தடுத்து 4 சிறுத்தைகள் கூண்டில் சிக்கியது. கூண்டில் சிக்கிய 4 சிறுத்தைகளும் திருப்பதியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடைபாதையில் 300-க்கும் மேல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    5-வதாக ஒரு சிறுத்தை நடைபாதை பகுதியில் சுற்றி திரிந்தது. கேமரா மூலம் அதனை கண்காணித்தனர். வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்காமல் சிறுத்தை ஆட்டம் காட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வன உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

    நடைபாதை அருகே அடுத்தடுத்து 5 சிறுத்தைகள் சிக்கி உள்ள சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வனவிலங்குகளிடமிருந்து பக்தர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 15 ஆயிரம் கம்புகள் வரவழைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு பாதைகளில் கம்புகளுடன் பக்தர்கள் மலையேறி செல்கின்றனர்.

    Next Story
    ×