search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கிளவுஸ் தொழிற்சாலையில் தீ விபத்து: 6 ஊழியர்கள் பரிதாப பலி
    X

    கிளவுஸ் தொழிற்சாலையில் தீ விபத்து: 6 ஊழியர்கள் பரிதாப பலி

    • அவுரங்காபாத் கிளவுஸ் தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.
    • இந்த தீ விபத்தில் 6 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத்தில் கிளவுஸ் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு தொழிற்சாலையை மூடியதும் ஊழியர்கள் உள்ளே படுத்து உறங்கினர்.

    இந்நிலையில், இன்று அதிகாலை 2.40 மணிக்கு கிளவுஸ் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உள்ளே படுத்து தூங்கிய 6 ஊழியர்கள் பரிதாபமாக உடல் கருகி இறந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு மீட்கப்பட்ட 6 ஊழியர்களின் உடல்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கிளவுஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 ஊழியர்கள் உடல் கருகி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×