என் மலர்tooltip icon

    இந்தியா

    ஓடும் காரில் இருந்து சாலையில் பணத்தை தூக்கி வீசிய வாலிபர்
    X

    ஓடும் காரில் இருந்து சாலையில் பணத்தை தூக்கி வீசிய வாலிபர்

    • வீடியோ வைரலான நிலையில் வாலிபர்களின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன.
    • காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபர்களை பிடித்து அவர்களுக்கு ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    நொய்டாவில் சாலையில் வேகமாக செல்லும் ஒரு காரில் இருந்து வாலிபர் ஒருவர் பணத்தை காரின் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி வீசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    செக்டார் 20 பகுதியில் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில், இரவு நேரத்தில் சாலையில் சொகுசு கார் ஒன்று வேகமாக செல்கிறது. அந்த காரில் வாலிபர்கள் சிலர் இருக்கின்றனர். அதில், ஜன்னல் ஓரம் இருந்த வாலிபர் ரூபாய் நோட்டுகளை எடுத்து சாலையில் வீசும் காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ வைரலான நிலையில் வாலிபர்களின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன. இதுபோன்ற செயல்களால் மற்றவர்களின் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படும் என விமர்சனங்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து நொய்டா போலீசார் விசாரணையில் இறங்கினர். காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபர்களை பிடித்து அவர்களுக்கு ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    Next Story
    ×