search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டார்ச்சர் செய்த காதலி.. பிரேக்அப் செய்ய முடியாததால் தூக்கில் தொங்கிய வாலிபர்
    X

    டார்ச்சர் செய்த காதலி.. பிரேக்அப் செய்ய முடியாததால் தூக்கில் தொங்கிய வாலிபர்

    • அப்பெண்ணின் ஆதிக்க கட்டுப்பாடுகள் பிடிக்காமல் அவரை விட்டு பிரிய விரும்பினார் கேஷவ்
    • சட்ட வல்லுனர்கள் மற்றும் மாந்திரீகவாதிகளின் உதவியையும் கேஷவ் நாடியிருக்கிறார்

    ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் உள்ளது ராம்கஞ்ச் மண்டி. இப்பகுதியை சேர்ந்தவர் புஷ்பேந்திரா என்கிற கேஷவ் (25).

    கேஷவும் ஒரு பெண்ணும் 5 வருடங்களாக காதலித்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல, கேஷவ் மீது அப்பெண் நண்பர் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். கேஷவ் பிற நண்பர்களுடன் பழகுவதையும் தடை செய்தார். இதனால் இருவருக்குமிடையே பல முறை சண்டை நடந்திருக்கிறது.

    கேஷவ், அந்த பெண் நண்பரின் பெயரை "லடாக்கு விமானம்" (போர் விமானம்) என்ற பெயரில் தனது அலைபேசியில் வைத்திருந்திருக்கிறார்.

    அப்பெண்ணின் ஆதிக்க கட்டுப்பாடுகள் பிடிக்காமல் அவரைவிட்டு பிரிய விரும்பிய கேஷவ், பிரேக்அப் செய்வதற்கான வழிகளை ஆராய்ந்திருக்கிறார்.

    கூகுள், யூடியூப் போன்றவற்றில் தேடியதோடு இல்லாமல், சட்ட வல்லுனர்கள் மற்றும் மாந்திரீகவாதிகளின் உதவியையும் அவர் நாடியிருக்கிறார். ஆனால் அவருக்கு இதில் சாதகமான வழி பிறக்கவில்லை.

    இந்நிலையில் கேஷவை வீட்டில் விட்டு விட்டு மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஒரு குடும்ப நிகழ்ச்சிக்காக சென்றிருக்கிறார்கள்.

    திரும்பி வந்தபோது எத்தனை முறை அழைத்தாலும், கேஷவ் வந்து கதவை திறக்கவில்லை.

    அலைபேசியை தொடர்பு கொண்டபோதும் கேஷவிடமிருந்து பதிலில்லை.

    சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, தூக்கில் சடலமாக தொங்கினார்.

    கேஷவை தற்கொலைக்கு தூண்டியதாக கேஷவின் காதலி மீது குற்றம் சாட்டி கேஷவின் தந்தை காவல்துறையிடம் புகாரளித்துள்ளார்.

    ஆனால், இதனை அந்த பெண் மறுத்துள்ளார். கேஷவ் இறப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கேஷவிற்கு பொருளாதார சிக்கல்கள் இருந்ததாகவும், அவருக்கு யாரும் உதவ முன் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×