என் மலர்tooltip icon

    இந்தியா

    டிசம்பர் 5-ந்தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி
    X

    டிசம்பர் 5-ந்தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி

    • மாநில முதல்-மந்திரிகளின் கூட்டம் டெல்லியில் டிசம்பர் 5-ந்தேதி நடக்கிறது.
    • பிரதமர் மோடியை மம்தா தனியாக சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

    கொல்கத்தா :

    மாநில முதல்-மந்திரிகளின் கூட்டம் டெல்லியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி நடக்கிறது. இதில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் கலந்து கொள்கிறார்.

    இந்த கூட்டத்துக்கு இடையே பிரதமர் மோடியை அவர் தனியாக சந்திக்க வாய்ப்பு இருப்பதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    அவ்வாறு இந்த சந்திப்பு நடந்தால், மாநிலத்துக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகைகளை, குறிப்பாக 100 நாள் வேலைத்திட்ட நிலுவையை உடனடியாக வழங்க பிரதமரிடம் மம்தா பானர்ஜி வலியுறுத்துவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத், மால்டா, நாடியா மாவட்டங்களில் கங்கை நதியரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுப்பார் என்றும் அவர்கள் கூறினர்.

    Next Story
    ×