என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல உருவாகும் பத்திரகாளியம்மன் ஆலயம்
    X

    தெலுங்கானாவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல உருவாகும் பத்திரகாளியம்மன் ஆலயம்

    • வெளிநாட்டு பக்தர்களும் மீனாட்சி அம்மன் கோவிலை வியந்து பார்த்து செல்கின்றனர்.
    • வாரங்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழமை வாய்ந்த பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 4 வாயில்களிலும் பிரம்மாண்ட ராஜகோபுரங்களுடன் காட்சியளிக்கிறது. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியே தாமரை வடிவில் மதுரை மாநகரம் உருவானதாக வரலாறு கூறுகிறது.

    வெளிநாட்டு பக்தர்களும் மீனாட்சி அம்மன் கோவிலை வியந்து பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் புதுப்பிக்கப்படும் பழமையான கோவில் ஒன்றை மீனாட்சி அம்மன் கோவில் போன்று வடிவமைக்க திட்டமிட்டுள்ளனர்.

    வாரங்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழமை வாய்ந்த பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கி.பி. 1323-ம் ஆண்டில் காகதிய பேரரசு காலத்தில் கட்டப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது.

    9 அடி அகலம் 9 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக பத்திரகாளி அம்மன் இந்த கோவிலில் காட்சியளிக்கிறார்.

    தினந்தோறும் இந்த கோவிலுக்கு சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் வரை வந்து செல்கின்றனர். ஆண்டு தோறும் 4 முறை பிரம்மாண்டமாக திருவிழாக்கள் நடத்தப்படுகிறது.

    பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவிலை பிரமாண்டமாக புதுப்பிக்க வேண்டும். அனைவரும் பிரமிக்கும் வகையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலை போல இந்த கோவிலை வடிவமைக்க வேண்டும் என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து கோவிலை சுற்றிலும் மாட வீதிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ரூ.100 கோடி செலவில் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

    மேலும் 4 புறமும் பிரம்மாண்ட ராஜகோபுரங்கள் அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1000 கோடி வரை செலவாகலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.

    மீனாட்சி அம்மன் கோவில் போன்று மாதிரிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணியில் ஈடுபடும் என்ஜினீயர்கள் கொண்ட குழுவினர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் தஞ்சை பெரிய கோவில் ஆகிய இடங்களில் ஆய்வு செய்து திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    விரைவில் அவர்கள் மதுரை, தஞ்சை கோவில்களில் ஆய்வு செய்த பிறகு இதற்கான பணிகள் தொடங்கும்.

    இதற்கு நன்கொடையாளர்கள் உதவியும் நாடாப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×