கள்ளக்காதலனுக்கு பிடிக்காததால் பெற்ற குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்த தாய்

முன்னாள் கணவருடன் பிறந்த குழந்தையை கேலி செய்ததால் விரக்தி.குழந்தையை கொலை செய்தால்தான் காதலுடன் வாழ முடியும் என்பதால் கொடூர முடிவு.
கள்ளக்காதலனுக்கு பிடிக்காததால் பெற்ற குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்த தாய்
Published on

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் அஞ்சலி (வயது 28). இவர் கணவரை விட்டு பிரிந்து, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீரில் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில் பெண் குழந்தை இருந்தது.

அஞ்சலி அஜ்மீரில் உள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணி புரிந்து வருகிறார். அதே ஓட்டலில் வேலைப் பார்க்கும் அல்கேஷ் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியுள்ளது. இருவரும் Live-in பார்ட்னராக வசித்து வந்துள்ளது. இவர்களுடன் 3 வயது குழந்தையும் வசித்து வந்துள்ளது. அஞ்சலியின் குழந்தை அல்கேஷ்க்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. குழந்தையையும், அஞ்சலியையும் அல்கேஷ் கேலி செய்துள்ளார். இதனால் அஞ்சலிக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது.

அல்கேஷ் உடன் தொடர்ந்து வாழ வேண்டும் என்றால், தனது மகளை கொலை செய்ய வேண்டும் என அஞ்சலி முடிவு செய்துள்ளார். இதனால், குழந்தையை தாலாட்டு தூங்க வைத்துள்ளார். பின்னர் தோளில் தூக்கிக் கொண்டு வசித்து வந்த இடம் அருகே உள்ள ஏரிக்கு சென்றுள்ளா்ர. ஏரியில் பெற்ற குழந்தை என்ற கூட பார்க்காமல் தூக்கி வீசியுள்ளார்.

அத்துடன் நள்ளிரவில் குழந்தையை காணவில்லை என்று நடுரோட்டில் அங்கும் இங்குமாக அழைந்து தேடுவது போன்று நாடகமாடியுள்ளார். போலீசாருக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட, கிடுக்குப்பிடி விசாரணையில் அஞ்சலி குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அஞ்சலியை போலீசார் கைது செய்து, கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அஞ்சலியுடன் சேர்ந்து அல்கேஷும் குழந்தையை தேடியுள்ளார். அவருக்கு இந்த கொலையில் தொடர்ந்து உள்ளதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com