search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    லாலு கட்சி நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
    X

    லாலு கட்சி நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

    • பீகாரில் இன்று லாலு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
    • லாலு கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ரெயில்வே பணியிட ஒதுக்கீட்டில் மோசடி செய்து நிலம் பெற்ற வழக்கில் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவியிடம் கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மேலும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் பீகாரில் இன்று லாலு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    பீகாரில் உள்ள முக்கிய நகரங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. லாலு கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து சோதனை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×