search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்
    X

    உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்

    • உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் ஆகஸ்ட் 27ம் தேதி பதவியேற்க உள்ளார்.
    • உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் ஆகஸ்ட் 27ம் தேதி பதவியேற்க உள்ளார்.

    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26ல் நிறைவடைகிறது. எனவே, புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் ஆகஸ்ட் 27ம் தேதி பதவியேற்க உள்ளார்.

    தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள யு.யு.லலித்துக்கு, தற்போதைய தலைமை நீதிபதி ரமணா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி நியமிக்கப்பட்ட நீதிபதி யு.யு.லலித், முத்தலாக் வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம்பெற்றவர். அயோத்தியில் சர்ச்சைகள் நிறைந்த ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிப்பதில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்.

    Next Story
    ×