ரஷிய அதிபர் புதினுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

ரஷியா - உக்ரைன் போரால் இந்தியா மீது அமெரிக்கா அதிகளவில் வரி விதித்துள்ளது. ரஷியாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கி தான் வருகிறது.
ரஷிய அதிபர் புதினுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
Published on

உக்ரைன்- ரஷியா இடையிலான போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்கான கடந்த வெள்ளிக்கிழமை அலஸ்காவில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார்.

ரஷியா - உக்ரைன் போரால் இந்தியா மீது அமெரிக்கா அதிகளவில் வரி விதித்துள்ளது. இதற்கு ரஷியாவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா வரி விதித்த போதும் ரஷியாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கி தான் வருகிறது.

இந்நிலையில், ரஷிய அதிபர் புதினை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com