search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரவீந்திரநாத்தின் எம்.பி. பதவி ரத்துக்கு இடைக்கால தடை- உச்ச நீதிமன்றம் அதிரடி
    X

    ரவீந்திரநாத்தின் எம்.பி. பதவி ரத்துக்கு இடைக்கால தடை- உச்ச நீதிமன்றம் அதிரடி

    • பண பட்டுவாடா, வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
    • சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

    ஓ.பி.ரவீந்திரநாத் கடந்த 2019ம் ஆண்டில் தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 76,319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    ஆனால், ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் மிலானி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்தார்.

    மேலும், பண பட்டுவாடா, வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்று கடந்த மாதம் 6ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

    இதைதொடர்ந்து, ஓ.பி.ரவீந்திரநாத் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இதில், ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×