search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பனி படர்ந்த பள்ளத்தாக்கில் போட்டோஷூட் நடத்திய ஜோடி- வீடியோ வைரல்
    X

    பனி படர்ந்த பள்ளத்தாக்கில் 'போட்டோஷூட்' நடத்திய ஜோடி- வீடியோ வைரல்

    • ஆர்யா என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு ஜோடியின் ‘ப்ரீ- வெட்டிங் போட்டோஷூட்’ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • வீடியோ மற்றும் புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சமீபகாலமாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட உடனேயே திருமண ஜோடியினர் 'ப்ரீ- வெட்டிங் போட்டோஷூட்' நடத்துவது அதிகரித்து வருகிறது. அதில் சவாலான வகையில் வீடியோ எடுப்பது, வித்தியாசமான இடங்களுக்கு சென்று புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஆர்யா என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு ஜோடியின் 'ப்ரீ- வெட்டிங் போட்டோஷூட்' காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இமாச்சல பிரதேசத்தில் ஸ்பிதி பள்ளத்தாக்கின் பனி போர்வை போர்த்திய இடத்தில் கடும் குளிரை தாங்கி கொண்டு மணமக்கள் போட்டோஷூட் நடத்திய காட்சிகள் உள்ளது. மைனஸ் 22 டிகிரி செல்சியசில் படம்பிடிக்கப்பட்ட இந்த காட்சிகளில் புதுப்பெண் கடும் குளிரை தாங்க முடியாமல் அவதிப்படுவதும், அருகில் இருப்பவர்கள் அவருக்கு உதவி செய்த பின்னர் தொடர்ந்து போட்டோஷூட் நடத்திய காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

    இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், 2 வினாடி வீடியோவிற்காக ஒருவரின் உயிரை பணயம் வைப்பது தேவையற்றது என்று சுட்டிக்காட்டினார். சமீபத்தில் குஜராத்தை சேர்ந்த ஒரு ஜோடி இமாச்சல பிரதேசத்தில் உறைபனி படர்ந்த பகுதியில் தங்களது திருமணத்தை நடத்திய காட்சிகளும் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×